பக்டீரியா இலைவெளிறல்
Appearance
பக்டீரியா இலைவெளிறல்(Bacteria leafblight) எனப்படுவது நெல்லில் தாக்கும் ஒரு நோய் ஆகும். நோய்காரணி சாந்தோமோனசு ஒறைசே (Xanthomonus orizae) எனும் பக்டீரியா. இந்நோய் பெரும்பாலும் நாற்று நட்டு 3-4 வாரங்களிலிருந்து தோன்றும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறிப் பின் வெளிறியது போர் மாறும்.
நோய்த்தாக்கம்
[தொகு]- ஆரம்ப நிலையில் இலேசான பச்சைநிற நீர்க்கசிவு அல்லது மஞ்சள் நிறக் கசிவு இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றும்.
- நுனிப்பகுதியிலிருந்து தாக்கம் இலையுறை வரைப் பரவும். இலைப்பரப்பு கருகிய திட்டுக்களாக மாறும்.இலைப்பரப்பு விரலால் தடவும் போது கரடுமுரடாகக் காணப்பபடும்.
நோய் பரவும் முறை
[தொகு]- முதல் போகத்தில் எஞ்சிய தாவரப் பாகங்களில் நோய்க்காரணியின் வித்திகள் காணப்படும்.
- காற்று நீர் மூலமும் பரவும்.
- நாற்றின் சேதமடைந்த வேரிலிருந்துதம் வித்திகள் பரவும்.