விவசாயத்தை மட்டுமின்றி மாணவர்களையும் பாதித்த வறட்சி - எப்படி தெரியுமா?
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி அந்த மாநில மாணவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் பலரும் கிராமங்களை விட்டே வெளியேறி புனே போன்ற பெருநகரங்களில் படித்து வருகின்றனர்.
பெருநகரங்களில் படித்தால் தங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால், தங்கள் பெற்றோர்கள் ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள போது படிப்பு செலவு மற்றும் இதர தேவைகளுக்காக அவர்களிடம் இருந்து பணம் வாங்குவதை தவிர்த்து வருவதாக கூறுகின்றனர் இந்த மாணவர்கள்.
இதில் சிலர் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே உண்பதாகவும், ஒரு சில மாணவர்கள் பகுதி நேர வேலைக்கு சென்று தங்கள் செலவுகளை பார்த்து கொள்வதாகவும் கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)